தேவையான பொருட்கள்:பச்சரிசி – 3/4 உழக்கு
பாசிப்பருப்பு – 1/4 உழக்கு
நெய் -75 மிலி
வறுத்த முந்திரி-15
மிளகு-20
இஞ்சி-சிறிதளவு
கறிவேப்பிலை-சிறிது
பெருங்காயத்தூள்-சிறிதளவு
தண்ணீர்-தேவையான அளவு
உப்பு-தேவையான அளவு.
செய்முறை:பாசிப்பருப்பையும்,அரிசியையும் தண்ணீர் ஊற்றி நன்குகலையவும். குக்கரில் கொஞ்சம் நெய் ஊற்றி,சிறிதளவு சீரகம்,ஐந்தாறு மிளகுடன் ,அரிசி பருப்பு கலவையை வாசம் வரும் வரை வறுக்கவும்.
1 பங்கு அரிசி பருப்பு கலவைக்கு 4 பங்கு தண்ணீர் வைக்கவும்.ஒரு கொதி வந்தவுடன் குக்கரை மூடி வெயிட் போட்டு அடுப்பை குறைக்கவும்.[இல்லாவிட்டால் அடிப்பிடித்துவிடும்]10 நிமிடத்தில் இறக்கி விடலாம்.
அடுத்து இருப்புச்சட்டியை அடுப்பில் வைத்து,நெய் ஊற்றி,சிறிது கடுகு போட்டு பொறிந்ததும்,தோல் சீவி பொடியாக நறுக்கி வைத்துள்ள இஞ்சி,சிறிதளவு பெருங்காயம்,கறிவேப்பிலை,வறுத்த முந்திரி,பொடித்த மிளகு போட்டு தாளித்து கொட்டினால் சுவையான வெண் பொங்கல் தயார்.